கல்லூரித் திடலில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

ஹாங்காங்: கல்லூரித் திடல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் இரண்டைக் கண்டுபிடித்து, அவற்றைச் செயலிழக்கச் செய்துவிட்டதாக ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர்.

ஹாங்காங்கில் அசாதாரண அரசியல் சூழல் காணப்படும் நிலையில் அதற்கும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலிஸ் விசாரித்து வருகிறது.

வான்சாய் மாவட்டத்தில் வா யான் கல்லூரியின் வாயிற்காவலர் அவற்றைக் கண்டதும் உடனடியாக போலிசுக்குத் தகவல் அளித்ததாகக் கூறப்பட்டது.

பயன்படுத்துவதற்குத் தயாரான நிலையில் அந்த வெடிகுண்டுகள் முழுமையாக உருவாக்கப்பட்டிருந்தன என்று வெடிகுண்டுச் செயலிழப்பு அதிகாரியான அலிக் வெக்விர்ட்டர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த இரு குண்டுகளிலும் சக்திவாய்ந்த வெடிபொருள் பத்து கிலோ இருந்ததாகவும் அவற்றுடன் ஆணிகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் திரு அலிக் குறிப்பிட்டார். “மக்களைக் கொல்வதும் அவர்களை ஊனமாக்குவதுமே இதன் நோக்கமாக இருக்க முடியும்,” என்றார் அவர்.

பின்னர் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அந்த வெடிகுண்டுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலிஸ் கருதுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!