சீரழித்தவர்களைச் சைகை மொழியால் சிக்க வைத்தார்

கோத்தா கினபாலு: பாலியல் ரீதியாக தன்னைச் சீரழித்தவர்களைச் சைகை மொழியால் இளம்பெண் அடையாளம் காட்டியதை அடுத்து, பதின்ம வயதினர் மூவரை மலேசிய போலிசார் கைது செய்தனர்.

செம்போர்னா மாவட்டம், ஜாலான் கலும்பாங் பகுதியைச் சேர்ந்த அந்த 18 வயது பெண்ணால் பேச முடியாது; காதும் கேட்காது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தன் மகள் வீட்டில் இல்லாததை அறிந்த அவரின் தந்தை, அவரைத் தேடினார். அப்போது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவில் தன் மகள் தரையில் அமர்ந்தபடி அழுதுகொண்டிருந்ததை அவர் கண்டார்.

மகளிடம் விசாரித்தபோது தமது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு குடிசையில் தன்னைச் சிலர் சீரழித்ததைச் சைகை மொழியில் அவர் உணர்த்தினார். இதையடுத்து, அவரின் தந்தை அந்தக் குடிசைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சிறுவர்கள் நால்வர் இருந்ததைக் கண்டார்.

அவர்களில் மூவரை அந்தப் பெண் அடையாளம் காட்ட, பின்னர் அவரின் தந்தை போலிசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, ஏழு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!