தி ஹேக்: மியன்மார் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு நடந்ததை முழுமையாக்கக் கூறவில்லை. அத்துடன் தவறான வழிநடத்தலின் பேரில் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கூறியுள்ளார்.
ரோகிங்யா முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இனப்படுகொலை என மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் மியன்மாரை தற்காத்துப் பேசிய திருவாட்டி ஆங் சான் சூச்சி அம்மையார், சில சந்தர்ப்பங்களில் ராணுவம் தேவைக்கு அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற போதும், மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உருவாகியுள்ள கிளர்ச்சி சிக்கலானது, எளிதில் புரிந்துகொள்ள முடியாதது என்று கூறினார்.
இதில் காம்பியாவுக்கு முழுமை பெறாததும் முற்றிலும் தவறாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மியன்மாரில் 730,000க்கு மேற்பட்ட ரோகிங்யா அகதிகள் அம்மாநிலத்தில் அடக்குமுறையை மேற்கொண்ட பின் வெளியேறியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷின் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.
மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அங்கு பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைதான் என்று சூச்சி அம்மையார் வாதிட்டார்.
இதில் ராணுவ வீரர்கள் முறையாகவே நடந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று காம்பியா நாட்டின் வழக்கறிஞர்கள் மியன்மாரின் ரோகிங்யா மக்கள் பட்ட துன்பத்தை விளக்கமாகக் கூறியபோது அதை சூச்சி அம்மையார் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.