சான்டியாகோ: அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், சலவை இயந்திரம் மற்றும் அறைகலன்களில் பதுங்கி அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்துள்ளனர். மெக்சிகோவிலிருந்து மூடப்பட்ட டிரக் வாகனத்தில் சீனாவைச் சேர்ந்த 11 பேர் பதுங்கி யிருந்தனர். டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சான் டியாகோ நகரில் சான் சிட்ரோ எல்லையில் அந்த டிரக்கை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலவை இயந்திரத்தில் சிலர் பதுங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று சான்டியகோவுக்கான சுங்கத் துறை, எல்லைப் பாதுகாப்பு இயக்குநர் பீட் புளோரஸ் தெரிவித்தார். டிரக்கை ஓட்டி வந்த 42 வயது அமெரிக்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சலவை இயந்திரத்தில் ஆள் கடத்தல்
13 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2019 10:52

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!