லண்டன்: பிரிட்டிஷ் ராணுவத்தில் நேப்பாள நாட்டு குடிமக்கள் சேர்க்கப்படுவதை அனுமதிக்கும் ராணுவ உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நேப்பாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக நேப்பாளத்தி லிருந்து கூர்க்கா பெண்களையும் தமது நாட்டு ராணுவத்தில் சேர்க்க பிரிட்டிஷ் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது பற்றி தகவல் இல்லை.
ஆனால் 2020ல் கூர்க்கா பெண்களுக்கான பயிற்சியை பிரிட்டிஷ் ராணுவம் தொடங்கும் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1815ஆம் ஆண்டிலிருந்து நேப்பாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புதுடெல்லிக்கும் லண்டனுக்கும் காட்மண்டுவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், இந்தியாவும் பிரிட்டனும் கூர்க்காக்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதியளிக் கிறது.