மலேசியா: உணவகங்களில் புகைபிடித்தால் அபராதம்

மலேசியா: உணவகங்களில் புகைபிடித்தால் அபராதம்

1 mins read

ஜார்ஜ் டவுன்: உணவகங்களில் புகைப்பிடிப்பவர் களுக்கு அபராத விதிக்கும் சட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் நேற்று சொன்னார்.

இந்த நடவடிக்கைக்காக நாடு முழுவதும் சுமார் 5,000 சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தடையை மீறுபவர்களுக்கு சம்மன் அனுப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சோதனைகளை மேற்கொள்வார்கள்.

முதல் குற்றத்திற்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இது செலுத்தப்படாமல் விடப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால், 10,000 ரிங்கிட் வரை உயரக்கூடும்.

"புகைபிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் புகைபிடிக்காத பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம், ஏனென்றால் இரண்டாவது புகை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

எலக்ட்ரானிக் நிக்கோடின் டெலிவரி சிஸ்டம்ஸ் அல்லது 'வேப்களைப்' பயன்படுத்துபவர்கள் புகைபிடிப்பவர்களைப் போலவே கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வயதுவந்தோரின் புகைபிடித்தல் விகிதம் இப்போது 21 விழுக்காடாக இருப்பதாக டாக்டர் லீ கூறினார்.