மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணையின் பாகம்

கடலூர் அருகே கடலில் வீசிய வலையில் வியப்பூட்டும் வகையில் 100 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய பொருள் சிக்கியதைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து போலிசாருக்குத் தகவல் கூறினர். விசாரணையில் இது பிரமோஸ் ஏவுகணையின் பாகம் என்று தெரியவந்தது. கடலூரை அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்த அறிவரசன் என்ற 40 வயது மீனவர், தனது நண்பர் ஐயப்பனுடன் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். மீன்களுக்காக வீசிய வலையில் பெரிய பந்து போன்ற பொருள் சிக்கியது. அதை கரைசேர்த்த மீனவர்கள், போலிசாருக்கும் தகவல் கூறினர். இதுகுறித்து ‘இஸ்ரோ’ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவன அதிகாரிகள் வந்ததும் ஏவுகணை யின் பாகம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!