‘மனித உரிமை பற்றி பேசினால் விபரீதமாகிவிடும்’

சோல்: மனித உரிமைகள் பற்றி அமெரிக்கா ஏதேனும் குறை கூறினால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரிய அரசின் நிர்வாகத்தில் மனித உரிமைகள் பிரச்சினைகள் உள்ளதென அமெரிக்கா சொன்னால் விபரீதமாகிவிடும் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறியதை வடகொரியாவின் அதிகாரத்துவ ஊடகமான ‘கேசிஎன்ஏ’ நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்கா உள்பட பல நாடுகளின் ஆதரவில் புதன் கிழமை அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், வடகொரியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமைகள் மீறல் குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பியோங்யாங்கின் ஐக்கிய நாட்டு தூதர் இதனை மறுத்திருந்தார்.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று திங்கட்கிழமை அன்று வடகொரியாவுக்கான சிறப்பு அமெரிக்க தூதர் ஸ்டீவன் பீகன் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வடகொரிய வெளியுறவு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!