கை சிக்கிக்கொண்டதில் ஐந்து மணி நேரமாக மூதாட்டி பரிதவிப்பு

சிபு: கழிவறையின் குழாய்க்குள் தமது வலது கை சிக்கிக்கொண்டதில் ஐந்து மணி நேரமாக அல்லாடினார் 74 வயது மூதாட்டி.

சரிகெய் பகுதியில் அமைந்துள்ள இங் டாய் ரோட்டில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழிவறையில் தடுக்கி விழுந்ததால் அவரின் வலது கை அங்கிருந்த குழாயில் மாட்டிக்கொண்டது. மாலை ஐந்து மணியிலிருந்து மூதாட்டியைப் பார்க்காத அவரின் அண்டைவீட்டார், வீட்டைச் சோதித்துப் பார்த்ததில் கழிவறையில் மூதாட்டி இருந்த கதியைக் கண்டார்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் உடனே மூதாட்டியின் வீட்டுக்கு வந்தனர். கழிவறையின் தரை ஓடுகளை உடைத்து மூதாட்டியின் கையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிடித்ததாகவும் கூறப்பட்டது.

மூதாட்டி தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!