மணிலா: பிலிப்பீன்சின் மிண்டானோ தீவுக்கருகே மலேசிய கடல் பகுதியில் அபு சாயஃப் போராளிகளால் கடந்த செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட மூன்று இந்தோனீசியர்களில் இருவரை பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜோலோ தீவு மலைப்பகுதியில் பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நேற்று நீடித்த 30 நிமிட துப்பாக்கிச் சண்டையின்போது ஒரு வீரரும் அபு சாயஃப் போராளி ஒருவரும் கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி ஒருவர் கூறினார்். போராளிகளின் பிடியில் சிக்கியிருந்த இருவர், அந்த துப்பாக்கிச்சண்டையின்போது போராளிகளிடமிருந்து தப்பிச் சென்றதாவும் அவ்விருவரையும் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளதாகவும் ராணுவத் தளபதி கிரலிட்டோ சோபிஜானா கூறினார். போராளிகளிடம் சிக்கியிருந்த மற்றொருவர் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது இன்னமும் போராளிகளிடம் சிக்கியிருக்காலம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற ராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.
போராளிகள் கடத்திய 2 இந்தோனீசியர்கள் மீட்பு
23 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2019 10:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!