ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஹாங்காங் போலிசார் மோதல்

ஹாங்காங்: சீனாவின் உய்கர் இனத்தவர்களுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் மிளகு கரைசலை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் வீசியதாக காவல் துறையினர் கூறினர். முதலில் அமைதியாகத் தொடங்கிய பேரணி இறுதியில் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார்் முயன்றனோது இரு தரப்பினருக்கும் இ்டையே மோதல் ஏற்பட்டது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,000 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்களில் இளையர்களும் முதியவர்களும் அடங்குவர் என்றும் போலிசார் கூறினர். போலிசார் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. ஹாங்காங்கில் ஏழாவது மாதமாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. ஹாங்காங்கில் மனித உரிமைகளுக்காக ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!