அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 7 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கியில் கிட்டத்தட்ட 71 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு நேற்று கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதன் விளைவாக படகில் பயணம் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

படகு கவிழ்ந்த தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் ஐந்து பேர் மாண்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஏரியில் விழுந்த ஏறத்தாழ 64 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக துருக்கி ஊடகம் தெரிவித்தது.

கவிழ்ந்த படகில் இருந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து துருக்கிக்கு அகதிகளாக வந்தவர்கள் என்று துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!