அமெரிக்க தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கொல்லப்பட்டான்

ஒயிட் செட்டில்மென்ட், டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், ஃபோர்ட் வொர்த் பகுதிக்கு வடமேற்கில் உள்ள ஒயிட் செட்டில்மென்ட் தேவாலயத்துக்குள் நேற்று முன்தினம் திடீரென நுழைந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தேவாலயத்தில் இருந்தவர்களில் கைத்துப்பாக்கி ஏந்திய ஒரு சிலர் அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும் டெக்சஸ் போலிஸ் தெரிவித்துள்ளது.

அந்த சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக அவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலிஸ் கூறியது.

இதில் காயமடைந்த மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிக்காரனின் வெறித்தனத்தைக் கட்டுப்படுத்த தேவாலயத்தில் இருந்தவர்கள் ஒரு சிலரின் துணிகரச் செயலால் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிந்ததாக ஒயிட் செட்டில்மென்ட் போலிஸ் பிரிவுத் தலைவர் ஜே.பி. பெவரிங் தெரிவித்தார்.

“ஏராளமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அமெரிக்கா பார்த்துவிட்டது. “எனினும், பண்டிகை காலத்தில் இது நிகழ்வது வேதனை தருகிறது,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!