மகன் அஸ்தியை பெற்றோரிடம் திரும்ப ஒப்படைத்த திருடன்

லண்டன்: மகனின் அஸ்தியைக் கொண்ட கலசம், திருட்டுப் போனதால் அதைத் தங்களிடம் கொடுத்துவிட பெற்றவர்கள் ஊடகங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கலசத்தை எடுத்த திருடனே தம்பதியுடன் தொடர்புகொண்டு அழுதவாறு மன்னிப்பு கேட்டதுடன் கலசம் எங்கு உள்ளது என்றும் கூறிய சம்பவம் நடந்துள்ளது.

தங்களின் 19 வயது மகன் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்ததை அடுத்து, மகனின் அஸ்தியை ஓர் அழகான, அமைதியான இடத்திலுள்ள கடலில் கரைக்க போலந்தை சேர்ந்த தம்பதியர் திட்டமிட்டிருந்தனர்.

சைப்ரசைத் தேர்வுசெய்து அங்கு சென்ற தம்பதியர், தங்களின் காரில் அஸ்தி கலசத்தை ஒரு கறுப்புத் தோள் பைக்குள் வைத்திருந்தனர்.

திருடப்பட்ட அஸ்தி திரும்ப கிடைக்காது என்று நினைத்து தம்பதியர் மீண்டும் போலந்துக்கு திரும்பிய பின் திருடனே அவர்களுடன் தொடர்புகொண்டது தம்பதியருக்கு அதிர்ச்சியளித்தது.

மகனின் அஸ்தி மீண்டும் கிடைத்துவிட்ட நிலையில் தம்பதியர் தாங்கள் திட்டமிட்டபடி மீண்டும் சைப்ரசுக்குச் சென்று அஸ்தியைக் கரைக்கவுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!