ஜகார்த்தாவில் பெருவெள்ளம்; மின்சார விநியோகம் துண்டிப்பு

புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை மழை கொட்டித் தீர்த்ததால் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த ஏழாண்டுகளில் இதுவே ஆக மோசமான வெள்ளம் எனக் கூறப்படுகிறது.

இந்த வெள்ளம் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நாடினர்.

முன்னெச்சரிக்கையாக ஜகார்த்தாவின் 724 பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

ரயில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் ரயில்கள் தாமதமாகச் சென்றன. ஓடுபாதை நீரில் மூழ்கியதால் கிழக்கு ஜகார்த்தாவிலுள்ள ஹலிம் பெர்டனகுசுமா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுவதும் வெள்ளத் தணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!