கென்யா: அமெரிக்க தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல்

நைரோபி: கென்யாவிலுள்ள அமெரிக்க கூட்டு ராணுவ படைத் தளத்தின் மீது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் பயங்கரவாதக் குழு நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாகக் சிஎன்என் செய்தி கூறுகிறது.

கடலோரப் பகுதியான லாமுவில் உள்ள மாண்டா விமான தளத்தின் மீது உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏழு விமானங்களும் மூன்று ராணுவ வாகனங்களும் வான் வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக பயங்கரவாத அமைப்பு கூறுவதாக இன்னோர் செய்தி தெரிவிக்கிறது.

எனினும், இத்தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்க, கென்ய ராணுவத்தினரின் பதிலடியில் 4 பயங்கரவாதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கென்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் பால் ஜுகுனா தெரிவித்து

உள்ளார்.

இந்தத் தாக்குதலில் இரு நாட்டு இராணுவ வீரர்கள் தரப்பில் எவரும் உயிரிழந்தார்களா என்பது தொடர்பாக உடனடித் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை கென்ய போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சோமாலியாவுக்கு கென்யா படைகளை அனுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்-ஷாபாப் பயங்கரவாதக் குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!