மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடந்து முடிந்த கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தோல்வியின் மூலம் பக்கத்தான் ஹரப்பான் பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் அது மாற்றங்களை மேற்கொள்ளும் என்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை நடந்த இடைத்தேர்தலில் எதிர்த்தரப்பு தேசிய முன்னணி வேட்பாளர் முகமது அலாமின் 2,029 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வாரிசான் கட்சியின் வேட்பாளர் தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட ஒருவர் மட்டும் பொறுப்பாக முடியாது என்றும் மக்களிடம் நன்
மதிப்புப் பெற பக்கத்தான் ஹரப்பான் துடிப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கூட்டணியைச் சேர்ந்த பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகாதீர் முகம்மது கூறுகையில், கிமானிஸ் தொகுதி வாக்காளர்கள் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியின் நன்மையை இன்னும் உணரவில்லை என்றார்.
இருப்பினும் முந்திய ஆட்சியைக் காட்டிலும் தற்போதைய ஆட்சி சிறப்பானது என்பதை அவர்கள் காலப்போக்கில் உணருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.