பெட்டாலிங் ஜெயா: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் இதுவரை பத்து இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விகளுக்கு நாட்டின் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது பொறுப்பேற்க வேண்டும் என்று புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்கர்பால் சிங் நேற்று தெரிவித்தார்.
தமது தந்தையான அமரர் திரு கர்பால் சிங்கைப் போலவே திரு ராம்கர்பால் சிங்கும் ஒரு வழக்கறிஞர், ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்.
அனைவருடனும் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக டாக்டர் மகாதீர் தெரிவித்திருப்பது அவரது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்போருக்கு அவர் மீதுள்ள நம்பிக்கையைக் குறைப்பதாக திரு ராம்கர்பால் சிங் தெரிவித்தார். டாக்டர் மகாதீர் கூறுவதைப் பார்த்தால் அவர் அம்னோவுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அவர் அக்கறை தெரிவித்தார்.