தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கொல்பவருக்கு வெகுமதியாக 3 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
“டிரம்ப்பைக் கொல்பவருக்கு நாங்கள் வெகுமதியாக 3 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவோம் என்று கெர்மான் மாகாண மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அகமது ஹம்சே கூறினார்.
கெர்மான் மாகாணம் அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் சொந்த மாகாணமாகும்.