20,000 தமிழர்கள் மரணம் என்ற அதிபரின் அறிவிப்புக்கு இலங்கை அரசியல் கட்சி எதிர்ப்பு

கொழும்பு: இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்ததற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் கதி என்ன என்பது இன்று வரை மர்மாக உள்ளது.

காணாமல் போனவர்களின் நிலையை அறிவிக்க கோரி அவர்களது உறவினர்கள் பல்லாண்டு காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை தம்மைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தூதரிடம் 20,000 தமிழர்களும் இப்போது உயிருடன் இல்லை என்று அதிபர் கோத்தபய கூறினார். தொடர்ந்து அறிவிக்கை வெளியிட்ட அதிபர் அலுவலகம், உயிரிழந்த அனை வருக்காகவும் மரணச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இந்த அறிவிப்பு, உறவுகளை மீட்கக் கோரி போராடி வருவோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதரன், “காணாமல் போனவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். ஆகையால் அவர்களின் கதி பற்றி இலங்கை ராணுவமே பதில் சொல்ல வேண்டும்,” என்று கூறி அதிபரின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!