மணிலா: ‘தால்’ எரிமலைத் தீவுக்கு அடியில் கூடுதல் அதிர்வுகளை பிலிப்பீன்ஸ் பதிவு செய்துள்ளது. அந்த எரிமலை எந்நேரமும் வெடிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 486 அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். நேற்று ‘தால்’ எரிமலையிலிருந்து கரும்புகை வெளியானதாக தி பில்லிப்பீன் ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டது.