வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை ஐந்து பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வூஹானில் இருந்து சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கிருமித் தொற்று இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை சுமார் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுவாச நோய் பிரிவின் தலைவர் நான்சி தெரிவித்துள்ளார். எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதேபோல், ஆஸ்திரேலியாவும் இக்கிருமித்தொற்றால் ஐந்தாவது நபர் பாதிக்கப்பட்டுள்ளதை நேற்று உறுதி செய்தது. அவர் வூஹானில் இருந்து சிட்னிக்கு சென்ற 21 வயது பெண் என்றும் கூறப்படுகிறது.
தென்கொரியாவில் நான்காவது நபருக்கு நேற்று இக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளம் சீன சுற்றுலாப் பயணிகள் லங்காவி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெற்றோருடன் வந்த இரண்டு மற்றும் நான்கு வயதுடைய சகோதரிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.