காபூல்: ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நேற்று விபத்துக்கு உள்ளானது. அந்த பயணிகள் விமானத்தில் 6 விமான சிப்பந்திகள், 38 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் குறித்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 1.15 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்ததன. அனேகமாக விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், விமானம் விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்து இதுவரையில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.