ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது மூவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஓர் ஏவுகணை தூதரகத்தின் உணவகத்தில் விழுந்ததாகவும் அப்போது உணவருந்தியவர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர் அமெரிக்கரா அல்லது தூதரகப் பணியில் உள்ள ஈராக்கைச் சேர்ந்தவரா எனத் தெளிவுபடுத்த அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது.

மற்ற இரு ராக்கெட்டுகள் உணவகத்தின் அருகில் விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவற்றால் பாதிப்புகள் ஏற்பட்டனவா என தகவல் ஏதும் இல்லை. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அப்துல் மஹதி, இத்தகைய தாக்குதல்களால் தங்கள் நாடு போர்ச் சூழலுக்குள் இழுக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர். இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரான், ஈரான் ஆதரவு போராளிகள் 14க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!