தெஹ்ரானில் இருந்து மஹ்ஷர் நகருக்குச் சென்ற கேஸ்பியன் ஏர்லைன்ஸ் மெக்டோனல் டக்ளஸ் எம்.டி-83 என்ற ஈரானிய பயணிகள் விமானம் ஓடுபாதைக்கு பதிலாக நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 136 பயணிகளில் இருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ‘விமானி மிகவும் தாமதமாக விமானத்தைத் தரையிறக்கினார், அதனால் அவர் ஓடுபாதையை தவறவிட நேரிட்டது,’ என்று விமான அதிகாரிகளை மேற்கோள் காட்டி மாநில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. படம்: இணையம்