நள்ளிரவில் 35 படகுகளுக்குப் பரவிய தீ; எட்டுப் பேர் பலி

அலபாமா: அமெரிக்காவின் அலபாமாவில் மரினா படகு வீடுகளில் பற்றிய தீயில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஸ்காட்ஸ்போரோ நகரத்தில் டென்னிசி நதி கரையோரம் கட்டப்பட்டிருந்த மரத்தினாலான படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படகு ஒன்றில் திடீரென பற்றிய தீ, மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியது.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசமாகின. சில படகுகள் ஆற்றில் மூழ்கின.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

படகில் இருந்து ஆற்றில் குதித்தவர்களில் ஏழு பேரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!