கராச்சி: இந்துக் கோயில் ஒன்றை சேதப்படுத்திய சிறுவர்களை பாகிஸ்தான் போலிசார் கைது செய்துள்ளனர்.
சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஓர் இந்து கோவிலை சேதப்பத்தியதாக கைதான 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களி
டம் போலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் உண்டி
யலில் உள்ள பணத்தைத் திருடுவதற்காக கோவிலைச் சேதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, கோவிலைச் சேதப்படுத்தி யவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மை துறை அமைச்சர் அரிராம் லால் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
“சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரமாகும். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோ திகள் ஈடுபட்டு உள்ளனர்,” என்றும் அவர் சொன்னார்.