வூஹான்: தனிமைப்படுத்தப்பட்ட தந்தை; கவனிப்பாரின்றி உயிரிழந்தார் பெருமூளை வாதம் கொண்ட இளைஞர்

தந்தையும் இளைய சகோதரனும் வூஹான் கிருமித் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து, பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர் வீட்டில் தனித்து விடப்பட்டிருந்ததால், கவனிக்க யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹுபெய் வட்டாரத்தில் வசித்து வந்த 49 வயதான தந்தை யான் ஸீயாவென், ஆட்டிசம் குறைபாடுள்ள 11 வயதான இளைய சகோதரன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு நாட்களில் யான் செங் என்ற அந்த இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவரது தந்தை வூஹானில் பணிபுரிந்துகொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மகன் வீட்டில் தனித்து இருப்பதைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் உதவி கோரினார் திரு யான்.

ஆனால், அந்த கோரிக்கை வைக்கப்பட்டதற்கு அடுத்த நாளே இளைஞர் உயிரிழந்தார்.

அந்த இளைஞர் ஜனவரி 24, 26 ஆகிய இரு நாட்கள் உணவு உட்கொண்டதாக கிராம அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 28ஆம் தேதி மருத்துவர் ஒருவர் யான் செங்குக்கு சிகிச்சை அளித்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

யான் செங்கின் தம்பி பிறந்த பிறகு அவர்களது தாயார் உயிரை மாய்த்துக்கொண்டதாக திரு யான் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்றும் அவரது கணக்கு தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும் சவுத்சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

#பெருமூளைவாதம் #வூஹான் #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!