கிருமித் தொற்றைக் கட்டுப்படுத் தும் நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்நிலையில், இது மேலும் பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறியுள்ளார்.
அரசாங்கம் இந்தக் கிருமித் தொற்று பரவல் குறித்து காலக்கிரமமான சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் கிருமித் தொற்று தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே வூஹான் நகரில் சிக்கிக்கொண்டுள்ள கம்போடிய மாணவர்களைச் சந்திக்க கம்போடிய பிரதமர் ஹுன் சென் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.