கொரோனா கிருமித்தொற்று: ஐநூற்றைத் தாண்டிய உயிரிழப்பு

கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 73 பேர் அக்கிருமித்தொற்றால் மாண்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்தத்தில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு 565ஆக உயர்ந்து விட்டது. சீனாவில் மட்டும் 563 பேர் அக்கிருமித்தொற்றால் மாண்டனர். ஹாங்காங்கிலும் பிலிப்பீன்சிலும் தலா ஒருவர் உயிரிழந்தார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,000ஐத் தாண்டிவிட்டது.

இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 1,153 பேர் உடல்நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர் என்று சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மட்டும் 261 பேர் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தனது அன்றாட அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்நிலையில், கிருமித்தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் 2,000 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய அவசரகால மருத்துவ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. ‘ஹுவோ யான்’ என அழைக்கப்படும் அந்த ஆய்வகத்தில் நாளொன்றுக்கு 10,000 ரத்த மாதிரிகளைச் சோதனை செய்ய முடியும் எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!