நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை

1 mins read
2048ebee-a4b7-42ac-93c4-ad2c46142d63
கிருமித்தொற்றால் பாதிப்படையக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. படம்: எஸ்டி, காலித் பாபா -

கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படையக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் நெஞ்சுர நிதிக்கு $550,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில் $250,000 அதிபர் சவாலால் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 300,000 வெள்ளியை கெப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் நன்கொடைப் பிரிவான கெப்பிட்டாலேண்ட் ஹோப் அறநிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சார்ஸ் கிருமித்தொற்று ஏற்பட்டபோது அதை எதிர்கொள்ள நிதி திரட்டும் வகையில் நெஞ்சுர நிதி அமைக்கப்பட்டது.