இலங்கை ராணுவத் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

வா‌ஷிங்டன்: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது அவ்வட்டாரத்தில் முக்கிய ராணுவப் பிரிவுக்கு அவர் தளபதியாக செயல்பட்டார்.

அப்போது பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் ‌‌ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை சுட்டிக்காட்டி அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, ஐநாவும் மற்ற அமைப்புகளும் ‌‌ஷவேந்திர சில்வா மீது சுமத்திய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு ஷவேந்திர சில்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அவர் சொன்னார்.

போரின்போது வடக்கே தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களை அரசாங்கப் படைகள் கைப்பற்றியபோது 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக வலதுசாரிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

இதில் சில்வாவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஷவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அனைத்துலக அளவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!