அங்காரா: சிரியாவில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக அந்நாட்டு ராணுவம் ரஷ்யாவுடன் சேர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த 33 வீரர்கள் கொல்லப்பட்டனர். இட்லிப் மாகாணத்தை தங்களுடைய வசம் வைத்துள்ள போராளிகளுக்கு துருக்கி ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது.
இதனால் சிரியா மேற்கொண்ட தாக்குதலில் துருக்கி வீரர்களும் சிக்கி மாண்டுள்ளனர்.
இந்த நிலையில் துருக்கி தலை நகர் அங்காராவில் அதிபர் ரேஸப் தயூப் எர்டோகன் தலைமையில் உயர்மட்ட அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிரியாவுக்குப் பதிலடி தருவதென முடிவு செய்யப்பட்டது. மேலும் துருக்கி தற்காப்பு அமைச்சர் ஹுலுசி அகாரும் மூத்த ராணுவ அதிகாரியும் உடனடியாக சிரியா எல்லைக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிந்தனர்.
துருக்கி அமைத்துள்ள ராணுவ நிலைகளிலிருந்து சிரியா ராணுவம் பின்வாங்க வேண்டும் என்பது எர்டோகனின் விருப்பமாகும்.
அப்படி மீறி சிரியா முன்னேறி வந்தால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
ஆனால் சிரியா விட்டுக் கொடுப்பதாக இல்லை.