வாஷிங்டன்: வாஷிங்டனில் கிருமித்தொற்றுக்கு மேலும் இருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே நியூயார்க் ஆளுநர் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்கிடையே லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் பயணி
களின் உடல்வெப்ப நிலையைச் சோதித்த ஊழியர்கள் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

