கிருமி பரவல்;
மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் கொரோனா கிருமி பரவுவதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான்: 90 வயது ஆடவர் மரணம்
தோக்கியோ: தோக்கியோவில் கிருமியால் பாதிக்கப்பட்ட 90 வயது ஆடவர் காலமானார். இவருடன் சேர்த்து மொத்தம் 16 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் 3வது நபர் பலி
லண்டன்: பிரிட்டனில் கிருமித் தொற்றுக்கு ஆளான 3வது நபர் உயிரிழந்தார். ஞாயிறு அன்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273க்கு அதிகரித்தது.
சவூதியில் நால்வர் பாதிப்பு
கெய்ரோ: சவூதி அரேபியாவில் கிருமியால் பாதிக்கப்பட்ட நான்கு புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 15க்கு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சீனாவில் பல தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டன
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் பல மூடப்பட்டன. நாடு முழுவதும் 40 புதிய சம்பவங்கள் ஏற்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

