பாக்தாத்: ஈராக்கின் தாஜி ராணுவ முகாம் மீது நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த முகாமில் அமெரிக்கப் படையினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இந்த முகாம் தாக்கப்பட்டுள்ளது.
முகாம் மீது குறைந்தது 10 ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் முகாமில் இருந்த ஈராக்கிய ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது முகாம் எங்கும் எச்சரிக்கை ஒலி ஒலித்ததாக அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு அந்த முகாமில் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டபோது அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சிலர் மாண்டனர்.
இந்தத் தாக்குதலை ஹஷீது அல் ஷாபி போராளி அமைப்பு நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது. தாக்கு
தலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த அமைப்பின் ஆயுதக் கிடங்கை அமெரிக்க ஆகாயப் படை தாக்கியது. ஈரானின் ஆதரவுடன் செயல்படும் கத்தைய்ப் ஹிஸ்புல்லா போராளி அமைப்பையும் அமெரிக்கா குறைகூறுகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அமெரிக்கப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இந்தத் தாக்கு
தலில் மூன்று ஈராக்கிய ராணுவ வீரர்கள், இரண்டு போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கிய அரசாங்கம் கூறியது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் போராளிகள் யாரும் மரணம் அடையவில்லை என்று அது கூறியது. அமெரிக்கா நடத்திய
தாக்குதலுக்கு ஈராக் கண்டனம் தெரிவித்தது.

