லிம் குவான் எங்: பொய்ச் செய்தி பரப்பிய அம்னோ உறுப்பினர் மீது நடவடிக்கை

லிம் குவான் எங்: பொய்ச் செய்தி பரப்பிய அம்னோ உறுப்பினர் மீது நடவடிக்கை

1 mins read
0720285b-f9e7-47a4-8e07-9007f62bcaa7
மலே­சி­யா­வின் முன்­னாள் நிதி அமைச்­சர் லிம் குவான் எங்­கின் மகன் சிங்­கப்­பூ­ரில் கைது செய்­யப்­பட்­ட­தாக வெளி­வந்த செய்­தியை அந்­நாட்டு பேலிஸ் படை­யின் தலைமை ஆய்­வா­ளர் அப்­துல் ஹமீது பாடோர் மறுத்­துள்­ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: தம் மகன் கைது செய்­யப்­பட்­ட­தாகப் பொய் செய்தி பரப்­பிய அம்னோ இளை­ஞர் தலைவர், தேசிய முன்­னணி, அம்னோ மற்­றும் பாஸ் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எதி­ராகச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்படி தமது வழக்­க­றி­ஞர்­களை டிஏபி தலைமை செய­லா­ளரும் மலேசிய முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மேலும் இவர்­க­ளுக்கு எதி­ராக போலி­சும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தனது மகன் சிங்­கப்­பூ­ருக்கு $2 மில்­லி­யனை எடுத்­துச் சென்று அதனை அறி­விக்க தவ­றி­ய­தால் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து பிப்­ர­வரி 29ஆம் தேதி­யன்று தான் சிங்­கப்­பூ­ருக்குச் சென்­ற­தாகவும் பப்பா அஜ்ரி என்ற பெய­ரில் அம்னோ இளை­ஞர் தலை­வர் ஒரு­வர் பொய் செய்தி பரப்­பி­யி­ருக்­கி­றார் என்று சொன்னார் லிம் குவான் எங்.