இத்தாலி: இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு; 25,000 பேர் பாதிப்பு

2 mins read
1304f69c-d13f-4f59-8025-f604e51879e0
கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இத்­தா­லி­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 368 பேர் உயி­ரி­ழந்­த­னர். படம்: இபிஏ/இஎஃப்ஏ -

இது­வரை இல்­லாத வகை­யில், கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இத்­தா­லி­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 368 பேர் உயி­ரி­ழந்­த­னர். இதை­ய­டுத்து, அங்கு கொரோ­னா­வால் பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை 1,809ஆக அதி­க­ரித்­தது.

அத்­து­டன், நேற்று முன்­தி­னம் மேலும் புதி­தாக 3,590 பேருக்­குக் கிருமி தொற்ற, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கை­யும் 25,000ஐ நெருங்­கி­விட்­டது.

"இது ஓர் அலை­யல்ல, ஆழிப் பேரலை," எனக் குறிப்­பிட்­டார் லோம்­பர்டி வட்­டா­ரத்­தில் உள்ள மோன்ஸா மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வுத் தலை­வர் டாக்­டர் ரொபர்ட்டோ ரோனா.

இத்­தா­லி­யில் கிரு­மித்­தொற்று உச்­சத்தை எட்டி வரு­கி­றதா, வரும் நாட்­களில் அது குறை­யத் தொடங்­குமா என எது­வும் தெரி­ய­வில்லை என்று இத்­தாலி தேசிய சுகா­தார நிலை­யத்­தின் தலை­வர் சில்­வியோ புரு­ச­ஃபெரோ தெரி­வித்­தார்.

கிருமி பர­வும் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக ஒட்டு மொத்த இத்­தா­லி­யும் ஒரு வார கால­மாக முடங்­கிக் கிடக்­கிறது. பள்­ளி­கள், உண­வ­கங்­கள், காப்பி கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன. மக்­கள் கூடத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள லோம்­பர்டி வட்­டா­ரத்­தில்­தான் இத்­தா­லி­யின் நிதித் தலை­ந­க­ரான மிலான் நக­ரம் அமைந்­துள்­ளது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோச­மாகி வரு­வ­தா­கக் கூறி­னார் லோம்­பர்டி ஆளு­நர் அட்­டி­லியோ ஃபோன்டனா.

"மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் படுக்­கை­கள் காலி­யாக இல்லை. செயற்கை சுவா­சக் கரு­வி­கள் பற்­றாக்­குறை நில­வு­வ­தால் வெளி­நா­டு­க­ளி­டம் உதவி கோரப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.

முகக்­க­வ­சத்­திற்­கான தேவை­யும் அதி­க­ரித்து வரு­வ­தா­க மிலான் நகர மேயர் பெப்பே சாலா குறிப்­பிட்­டார். இந்த நிலை­யில், சீனா­வில் இருந்து முகக்­க­வ­சங்­களை இறக்­கு­மதி செய்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

உல­கத் தர­மான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­களை லோம்­பர்டி கொண்­டுள்­ளது என உல­கச் சுகா­தார நிறு­வ­னம் தொடர்ந்து பாராட்டி வந்­தா­லும்­கூட, இப்­போ­தைக்கு அங்கு நிலைமை மோச­மா­கவே உள்­ளது.

மிலா­னி­லும் சுற்­று­வட்­டா­ரத்­தி­லும் அவ­சர மருத்­துவ வாக­னங்­களே இல்லை என அந்நக­ரின் நல்­வாழ்வு மன்ற உறுப்­பி­னர் கியு­லியோ கேலரா செய்­தி­யா­ளர்­டம் தெரி­வித்­தார்.

அதே­போல, மருத்­து­வ­ம­னை­களை மேலும் சிர­மத்­தில் ஆழ்த்­தா­மல் இருக்க மக்­கள் அனை­வ­ரும் தங்­கள் வீடு­க­ளுக்கு உள்­ளேயே தனித்திருக்­கும்­படி வெனிஸ் ஆளு­நர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

வட­இத்­தா­லி­யில் உள்ள லோம்­பர்டி வட்­டா­ரத்­தில் மட்­டும் இது­வரை 1,218 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­னர். அத்­து­டன், அங்கு மேலும் 13,272 பேரை கிருமி தொற்றி­யுள்ளது.

இத்­த­கைய சூழ­லில், அந்த வட்டாரம் மீது தமது அர­சாங்­கம் அதிக கவ­னம் செலுத்தி வரு­வ­தாக பிர­த­மர் ஜுசெப்பே கோன்டே கூறி இருக்­கி­றார்.

பெற்­றோர்­க­ளுக்கு ஊதி­யத்­து­டன் கூடிய விடுப்பு, சுய­தொ­ழில் புரி­வோ­ருக்கு ஆத­ரவு உள்­ளிட்ட பல்­வேறு உத­வித் திட்­டங்­கள் அடங்­கிய புதிய அவ­ச­ர­கால ஆத­ர­வுத் திட்­டத்தை அறி­விக்­க­வி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்­க­வி­ருந்த ஈஸ்­டர் கொண்­டாட்­டங்­களை ரத்து செய்­வ­தாக வத்­தி­கன் அறி­வித்து இருக்­கிறது.