கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த பிரான்ஸ் திண­று­கிறது

கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த பிரான்ஸ் திண­று­கிறது

2 mins read
9ef04bb7-1e68-4548-a190-cb59023244b8
தங்­கள் நாட்­டின் சில பகு­தி­களை முடக்­கி­வி­டு­வது பற்றி அர­சாங்க அதி­கா­ரி­கள் பரி­சீ­லித்­துக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த பிரான்ஸ் திண­று­கிறது என்று அந்­நாட்டு சுகா­தா­ரத்­து­றை­யின் உச்ச அதி­காரி ஜெரோம் சால­மன் தெரி­வித்­துள்­ளார். படம்: ஏஎப்பி -

தங்­கள் நாட்­டின் சில பகு­தி­களை முடக்­கி­வி­டு­வது பற்றி அர­சாங்க அதி­கா­ரி­கள் பரி­சீ­லித்­துக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த பிரான்ஸ் திண­று­கிறது என்று அந்­நாட்டு சுகா­தா­ரத்­து­றை­யின் உச்ச அதி­காரி ஜெரோம் சால­மன் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டில் உள்ள மதுக்­கூ­டங்­க­ளை­யும் உண­வ­கங்­க­ளை­யும் அர­சாங்­கம் மூடி­யி­ருக்­கும் வேளை­யில், வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கு­மாறு மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தும் அர­சாங்க அறி­விப்­பைப் பொருட்­ப­டுத்­தா­மல் பாரிஸ் நகர மக்­கள் பெருந்­தி­ள­ராக நேற்று முன்­தி­னம் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி பல்­வேறு இடங்­களில் சுற்­றித் திரிந்­த­னர் என்­றும் திரு சால­மன் நேற்று கூறி­னார்.

"வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் முக்­கி­யத்­து­வத்தை பெரும்­பா­லான மக்­கள் புரிந்­து­கொள்­ள­வில்லை. இந்த அள­வுக்கு மக்­கள் நாட்­டின் அதி­கா­ரத்­துவ அறி­விப்­பைப் புறக்­க­ணிக்­கி­றார்­கள் என்­றால், கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் நாங்­கள் வெற்றி காணப்போவ­தில்லை என்று அச்­சப்­ப­டு­கி­றோம்," என்று திரு சால­மன் பிரான்ஸ் இன்­டர் வானொலி­யி­டம் கவலை தெரி­வித்­தார்.

"கொரோனா கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் போராட்­டத்­தில் அர­சாங்­கத்­து­டன் ஒத்­து­ழைக்­கு­மாறு பிரான்ஸ் நாட்டு மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று திரு சோல­மன் கூறி­னார்.

இதற்­கி­டையே, பிரான்­சில் நேற்று முன்­தி­னம் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு 29 பேர் பலி­யா­கி­னர். இது ஒரே நாளில் அதி­க­மா­னோர் மர­ண­முற்ற எண்­ணிக்கை. இது­வரை பிரான்­சில் கொரோனா கொள்­ளை­நோய்க்கு 127 பேர் மடிந்து­விட்­ட­னர் என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் ஒலி­வி­யேர் வெரான் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் அங்கு புதி­தாக 900 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன என்­றும் கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து இது­வரை 5,400 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று பிரான்ஸ் தொலைக்­காட்சி கூறி­யது.

பிரான்ஸ் தனது முதற்­கட்ட நக­ராட்சி தேர்­தலை நேற்று முன்­தி­னம் நடத்­தி­யி­ருக்­கும் வேளை­யில், கிரு­மித்­தொற்று அச்­சத்­தால் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு குறைந்த எண்­ணிக்­கை­யி­லான மக்­கள் வந்திருப்பார்கள் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"வரும் நாட்­களில் அர­சாங்க அதி­கா­ரி­கள் அறி­வி­யல் ஆலோ­ச­கர்­க­ளைச் சந்­தித்து இரண்­டாம் கட்ட தேர்­தலை அடுத்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­து­வது பற்றி ஆலோ­சனை கேட்­கப்­படும் என்­றும் திரு வெரான் சொன்­னார்.

கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்த நாட்­டின் பல்­வேறு பகு­தி­களை முடக்­கி­வி­டு­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது என்று பர­வும் வதந்தி பற்றி கருத்­து­ரைக்க திரு வெரான் மறுத்து விட்­டார்.

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கும் பொரு­ளி­ய­லால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ, பில்­லி­யன் கணக்­கான யூரோவை செல­வ­ழிக்க பிரான்ஸ் தயா­ர் நிலையில் உள்­ளது என்று அதன் நிதி அமைச்­சர் புருனோ லேமேர் தெரிவித்து உள்ளார்.