ஜோகூர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு; ஐவர் பலி

ஜோகூர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு; ஐவர் பலி

1 mins read
71917271-bb77-43a2-913d-c1af33d62002
ஜோகூ­ரில் உள்ள பெங்­கெ­ராங் பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் வெடிப்பு ஏற்­பட்டு தீ மூண்­ட­தில் ஐவர் மாண்டனர். பெட்­ரோ­னாஸ்-சவூதி அராம்கோ கூட்டு ஒத்துழைப்பில் செயல்படும்  தொழிற்­சா­லை­யில் ஞாயிறு இரவு தீ மூண்­டது. உடனே அவ­ச­ர ­காலக் குழு செயலில் இறங்கியது என்று பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது. படம்: ஊடகம் -

கோலா­லம்­பூர்: ஜோகூ­ரில் உள்ள பெங்­கெ­ராங் பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் வெடிப்பு ஏற்­பட்டு தீ மூண்­ட­தில் ஐவர் மாண்டனர். பெட்­ரோ­னாஸ்-சவூதி அராம்கோ கூட்டு ஒத்துழைப்பில் செயல்படும் தொழிற்­சா­லை­யில் ஞாயிறு இரவு தீ மூண்­டது. உடனே அவ­ச­ர ­காலக் குழு செயலில் இறங்கியது என்று பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

மறு­நாள் திங்­கள் கிழமை காலை 11.15 மணி வரை மீட்பு நட­வ­டிக்கை நீடித்தது என்று ஜோகூர் மாநில தீ அணைப்­புத் துறை­யின் கமாண்­டர் அப்­துல் ரஹ்­மான் அஸெ­சூல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

"விபத்­தில் ஏழு பேர் சிக்­கி­னர், ஒரு­வர் பாது­காப்­பு­டன் தப்­பி­விட்­டார். மற்­றொ­ரு­வருக்கு 70 விழுக்­காடு தீக்­கா­யம் ஏற்பட்டது. நால்­வர் இறந்­து­விட்­ட­னர். ஒரு­வரைக் காண­வில்லை," என்றார் அவர்.

பின்­னர் காணா­மல் போன­வரும் இறந்­து­விட்டதாக அவர் அறிவித் தார். தீ விபத்­துக்­கான கார­ணம் குறித்து விசாரித்து வரு­கி­றோம் என்று அவர் கூறினார். இதற் ­கிடையே ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம், விபத்­தில் இறந்த குடும்­பத்­தி­ன­ருக்கு தனது ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்­துக்கொண்­டார்.

அவ­ரது இரங்­கல் செய்தி அதி­கா­ர­பூர்வ ஃபேஸ்புக்­ பக்கத்தில் வெளி­யி­டப்­பட்­டது. ஒரு வருட காலத்திற்குள் பெங்­கெ­ராங் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வளா­கத்­தில் 2வது முறையாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.