தோக்கியோ: 2016ல் ஊனமுற்றவர்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தி 19 பேரைக் கொன்ற ஜப்பானியருக்கு யோகோஹமா மாவட்ட நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.
தோக்கியோவில் உள்ள பராமரிப்பு இல்லத்தின் முன்னாள் ஊழியரான சடோஷி யூமட்சுக்கு வயது 30. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் காரணமாக ஜப்பானில் உடல் ஊனமுற்றவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி எழுந்தது.
இவ்வாண்டு தொடக்கத்தில் வழக்கு விசாரணை தொடங்கியபோது சகாமிஹாரா இல்லத்தின் முன்னாள் ஊழியரான யூமட்சு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது வழக்கறிஞர் முன்னாள் ஊழியரின் மனநிலையை சுட்டிக்காட்டி குற்றவாளி அல்ல என்று வாதிட்டார். சம்பவம் நடந்த சமயத்தில் அவர் போதையில் இருந்ததாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
2016 ஜூலை 26ஆம் தேதி சுகுய் யமயூரி-என் பராமரிப்பு இல்லத்தில் கத்திகளுடன் யூமட்சு நுழைந்தார்.
பின்னர் ஒவ்வொரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களை அவர் கத்தியால் தாக்கினார். இதில் 19 முதல் 70 வயது வரையிலான 19 பேர் மாண்டனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.
கத்தியால் தாக்கிய பிறகு அவர் போலிசில் சரண் அடைந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் களால் சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை என்று முன்பு மெய்னிச்சி ஷிம்புனுக்கு அளித்த பேட்டியில் யூமட்சு கூறியிருந்தார்.

