ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கிருமித்தொற்றுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் 2,400 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

