இத்தாலியில் அவலநிலை

இத்தாலியில் அவலநிலை

2 mins read
98b8af61-b530-47e6-9bed-67ca47ef1226
இத்­தா­லி­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் அந்­நாட்­ட­வர்­கள் படாத பாடு­ப­டு­கின்­ற­னர். கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட 16 மில்லியனுக்கும் அதிகமானோர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

ரோம்: இத்­தா­லி­யின் கொரோனா கிரு­மித்­தொற்­றால் அந்­நாட்­ட­வர்­கள் படாத பாடு­ப­டு­கின்­ற­னர். கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட 16 மில்லியனுக்கும் அதிகமானோர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டுள்ளனர்.

இந்­தச் சோகம் போதா­தென்று இறு­திச் சடங்கை உட­ன­டி­யாக நடத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இத்­தா­லி­யில் கிரு­மித்­தொற்­றால் மர­ணம் அடை­வோ­ரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டு இருப்­பதே இதற்கு கார­ணம்.

தேவா­ல­யங்­களில் உள்ள

மயா­னங்­களில் சவப்­பெட்­டி­கள் அடுக்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இறுதிச் சடங்கு நடை­பெற சவப்­பெட்­டி­கள் வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருக்­கும் அவ­லம் ஏற்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்ல, இறந்­தோ­ரின் குடும்­பத்­தி­னர்­க­ளா­லும் இறு­திச் சடங்­குக்­குப் போக முடி­யா­த­தால் உடல்­கள் அடக்­கம் செய்­யப்­ப­டா­மல் இருக்­கின்­ற­னர்.

இறந்­தோர் பல­ரின் குடும்­பத்­தி­னர்­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஐரோப்­பிய நாடு­களில் இத்­தா­லி­தான் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

"மிக­வும் விசித்­தி­ர­மான சூழ்­நி­லையை நாங்­கள் எதிர்­நோக்­கு­கி­றோம். எங்­க­ளுக்கு இப்­போது கோபம் வர­வில்லை.

"ஆனால் கிரு­மியை முறி­ய­டிக்க முடி­யாத கையா­ளா­காத நிலையை நாங்­கள் உணர்­கி­றோம்," என்று கிரு­மித்­தொற்­றுக்­குத் தமது கண­வ­ரைப் பறி­கொ­டுத்து அவ­ரது இறு­திச் சடங்­கிற்­குப் போக முடி­யா­மல் தவிக்­கும் 70 வயது திரு­வாட்டி ஃபிராங்கா ஸ்டே­ஃப­னேலி தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இத்­தாலி முற்­றி­லும் முடங்­கி­விட்­டது. தெருக்­கள் வெறிச்­சோ­டிக் கிடக்­கின்­றன. கிட்­டத்­தட்ட 60 மில்­லி­யன் இத்­தா­லி­யர்­கள் தங்­கள் வீட்­டுக்­குள்­ளேயே இருக்­கின்­ற­னர்.

வட­இத்­தா­லி­யில் மரண எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. மேலும் 3,760 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தி­னம் தெரி­விக்­கப்­பட்­டது.

ஐரோப்­பா­வி­லேயே இத்­தா­லி­யில்­தான் அதிக முதி­யோர் இருக்­கின்­ற­னர்.

இத­னால்­தான் இத்­தாலி அதி­கம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். இத்­தா­லி­யில் 2,100க்கும் மேற்­பட்­டோர் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ள­னர்.