பெர்லின்: கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு ஐரோப்பிய எல்லை முழுமையாக மூடப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைய 30 நாட்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பாவில் நாளுக்கு நாள் கொரோனா கிருமி பரவி வருகிறது. இதில் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து கொரோனா கிருமிக்கு எதிராக புதிய நடவடிக்கையை எடுத்துள்ளன.
காணொளி மூலம் சந்தித்த 27 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய வட்டாரத்தில் தேவையற்ற பயணங்களுக்குத் தடை விதிக்க இணக்கம் தெரிவித்தனர்.
இந்த யோசனையை பிரான்ஸ் முன்மொழிந்திருந்தது. இதனால் உறுப்பு நாடுகள் மற்றொரு உறுப்பு நாட்டுக்காக கதவை மூட வேண்டிய அவசியமில்லை.
ஆரம்பத்தில் முப்பது நாட்களுக்குத் தடை நீடிக்கும். ஆனால் இந்தத் தடை நாடு திரும்பும் ஐரோப்பியர்கள், சமூக சேவை ஊழியர்கள், எல்லைகளுக்கு இடையே பணியாற்றும் ஊழியர்கள், முன்னாள் ஐரோப்பிய உறுப்பு நாடான பிரிட்டனின் குடிமக்கள் ஆகியோருக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஐரோப்பிய தடையை ஜெர்மனி உடனடியாக அமல்படுத்தும் என்று பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளியல் நாடான ஜெர்மன் இதற்கு முன்பு தனது எல்லைகளை மட்டும் மூடியிருந்தது.
"இது ஒரு தற்காலிக நடவடிக்கை, நீண்டநாட்களுக்கு தேவையிருக்காது," என்று சுவீடன் உள்துைற அமைச்சர் மிகைல் டாம்ெபர்க் தெரிவித் தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் அலுவலகம், ஒருங்கிணைக்கப்படாத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தது.
ஒவ்வொரு நாட்டின் பொருளியலைப் பாதிக்கும் கொரோனா கிருமிக்கு எதிரான நடவடிக்கை ஒருங்கிணைப்படாமல் இருந்தால் ஒரு பயனும் இல்லை என்று அது வலியுறுத்தியது.

