கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க இத்தாலி முடிவு

கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க இத்தாலி முடிவு

2 mins read
6f179f83-2b58-4089-81d6-b2ae2fcc71c0
கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் இத்­தா­லி­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 368 பேர் உயி­ரி­ழந்­த­னர். படம்: இபிஏ/இஎஃப்ஏ -

இத்­தா­லி­யில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தால் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை ஏப்ரல் 3ஆம் தேதிக்­குப் பிற­கும் நீட்­டிக்க உள்­ள­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் ஜுசெப்பே கோன்டே தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்­றால் ஆக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஐரோப்­பிய நாடு இத்­தா­லி­தான். இதை­ அடுத்து, கடந்த 12ஆம் தேதி முதல் அந்­நாட்­டில் பெரும்­பா­லான கடை­கள் அடைக்­கப்­பட்­டுள்­ளன; பொது­மக்­கள் கூடத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தடைகள் இம்­மா­தம் 5ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­ய­வுள்­ளன.

அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை கல்வி நிலை­யங்­களை மூடி­ இ­ருக்­க­வும் விளை­யாட்டு நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தடை விதித்­தும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், "ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்ட தேதி­யைக் காட்­டி­லும் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் மேலும் நீட்­டிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­யம்," என பிர­த­மர் கோன்டே நேற்று இத்­தா­லிய செய்­தித்­தாள் ஒன்­றுக்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது கூறி­னார்.

கொரோனா தொற்­று கார­ண­மாக நேற்று முன்­தி­னம் மட்­டும் இத்­தா­லி­யில் 475 பேர் மர­ண­ம் அடைந்­த­னர். கிரு­மித்­தொற்­றால் ஒரே நாளில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களில் இதுவே ஆக அதி­கம். இத­னு­டன் சேர்த்து, இது­வரை அங்கு 2,978 பேரின் உயிரை கொரோனா கிருமி பறித்­துள்­ளது. கிருமித்தொற்றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யும் 35,000ஐத் தாண்­டி­விட்­டது.

இந்­நி­லை­யில், அடுத்த சில நாட்­களில் கிரு­மித்­தொற்று உச்­சத்தை எட்­டும் என்­றும் அதன்­பின்­னர் படிப்­ப­டி­யா­கக் குறை­யக்­கூ­டும் என்­றும் தான் நம்­பு­வ­தாக திரு கோன்டே சொன்­னார்.

அப்­படி மோச­மான கால­கட்­டம் முடி­வுக்கு வந்­தா­லும்­கூட உட­னடி­யாக இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பி­விட முடி­யாது என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு உள்ள லோம்­பர்டி வட்­டா­ரம், கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யாத நிலையை நெருங்­கி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆத­லால், அனை­வ­ரும் வீட்­டி­லேயே இருக்­கும்­படி லோம்­பர்டி ஆளு­நர் அட்­டி­லியோ ஃபோன்டானா பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இத­னி­டையே, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறி­விக்­கப்­பட்ட முதல் வாரத்­தில் அவற்றை மீறி­ய­தாக கிட்­டத்­தட்ட 43,000 பேர் பிடி­பட்­ட­னர் என்று இத்­தா­லிய உள்­துறை அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.