பெய்ஜிங்: சீனாவில் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு திரும்பியவர்களிடமிருந்து 228 கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவாகி இருந்தன என்றும் சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பிய சீன நாட்டவர்கள் சோதிக்கப்பட்டதில் கிருமித்தொற்று உறுதியானது.

