130,000 பிரெஞ்சுக்காரர்கள் தாய்நாடு திரும்ப முயற்சி

130,000 பிரெஞ்சுக்காரர்கள் தாய்நாடு திரும்ப முயற்சி

1 mins read
2feda1b4-4e25-45ab-bb64-74d74745e011
பிரான்­சில் கிரு­மித்­தொற்று நாளுக்கு நாள் கிட்­டத்­தட்ட 40% அதி­க­ரித்து வரு­கிறது. இது­வரை அங்கு கிரு­மித்­தொற்­றால் 372 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்; கிட்­டத்­தட்ட 11,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். படம்: ஏஎப்பி -

பாரிஸ்: கொரோனா கிரு­மித்­தொற்று பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்ள நிலை­யில் பல்­வேறு நாடு­களில் சிக்­கி­யி­ருக்­கும் 130,000 பிரெஞ்­சுக்­கா­ரர்­க­ளைத் திரும்ப அழைத்­துக்­கொள்ள முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக பிரான்ஸ் வெளி­யு­றவு அமைச்­சர் ஜேன் இவெஸ் லா டிரை­யன் தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு ஆப்­பி­ரிக்க நாடான மொரோக்­கோ­வில் இருந்து ஏற்­கெ­னவே 17,000 பேரை பிரான்­சுக்கு அழைத்து வந்­து­விட்­ட­தா­க­வும் இன்­னும் 20,000 பேர் அங்கு இருப்­ப­தா­க­வும் திரு லா டிரை­யன் கூறி­னார்.

அப்­படி நாட்­டிற்­குத் திரும்­பும் அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பிரான்­சில் கிரு­மித்­தொற்று நாளுக்கு நாள் கிட்­டத்­தட்ட 40% அதி­க­ரித்து வரு­கிறது. இது­வரை அங்கு கிரு­மித்­தொற்­றால் 372 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்; கிட்­டத்­தட்ட 11,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.