பியூனஸ் அய்ரிஸ்: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அர்ஜெண்டினாவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரங்காடிகள், மருந்துக்கடைகள் போன்ற அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து வேறு எதற்காகவும் அர்ஜெண்டினா மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. நேற்று நடைமுறைக்கு வந்த இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நீடிக்கும் என்று அதிபர் அல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.
"கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் நீக்குப்போக்கு அறவே இருக்காது," என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
எல்லைகள் மூடல், கிட்டத்தட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து, பள்ளிகள் மூடல், கிருமித் தொற்றுக்கான அறிகுறி தெரிந்தால் அல்லது கிருமி பாதித்த பகுதிகளில் இருந்து வந்தால் கட்டாயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தல் என ஏற்கெனவே பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிருமித்தொற்றால் அங்கு இதுவரை மூவர் மாண்டுவிட்டனர்.

