கிருமித்தொற்றைக் கண்டறியும் புது அறிகுறி

கிருமித்தொற்றைக் கண்டறியும் புது அறிகுறி

1 mins read
cce0f576-aa9a-4382-b22b-ada49d49a5b4
நியூயார்க் நகரில் மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடம். ஸ்பெ­யின், ஜெர்­மனி, ஈரான் ஆகிய நாடு­க­ளை­விட கிரு­மித் தொற்றுச் சம்­ப­வங்­கள் அமெ­ரிக்காவில் அதி­க­மாக பதி­வா­கி­யுள்­ளன. சீனா­வில் 81,348 பேரும் இத்­தா­லி­யில் 53,578 பேரும் அமெ­ரிக்­கா­வில் 26,747 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். படம்: இபிஏ -

நியூயார்க்: நுக­ரும் திறன், சுவையை அறி­யும் திறன் ஆகி­ய­வற்றை இழப்­போ­ரைத் தனி­மைப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருக்­கி­றதா என்­ப­தைப் பரி­சோ­திக்­கு­மாறு மருத்­து­வர் குழு ஒன்று பரிந்­து­ரைத்­துள்­ளது. அவர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்­றின் வேறு அறி­கு­றி­கள் இல்­லா­மல்­கூட இருக்­க­லாம்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு தாயால், அவ­ரது குழந்தை மலம் கழித்த நாற்­றத்­தைக்­கூட உண­ர­மு­டி­ய­வில்லை. அதே­போல, வாச­னையை வைத்தே உண­வுப் பொருட்­களை அடை­யா­ளம் காணும் திறன் கொண்ட சமை­யல் வல்­லு­நர்­க­ளால், கிரு­மித்­தொற்று கண்ட பிறகு பூண்­டின் வாச­னை­யைக்­கூட உணர முடி­ய­வில்லை; சுவை­யை­யும் அவர்­க­ளால் உணர முடி­ய­வில்லை.

கிரு­மித்­தொற்று கண்ட பல­ரால் பல­வி­த­மான வாசனை, நாற்­றங்­களை உணரமுடி­யா­மல் போனது என்­கிறது அந்த மருத்­து­வர் குழு.

நுகர்வு, சுவை உணர்­வு­களை இழப்­போர் தங்­களை 7 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு பிரிட்­ட­னைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபு­ணர்­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கேட்­டுக்­கொண்­ட­னர். கிரு­மிப் பர­வலை இது குறைக்­கும் என்­றும் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இதற்கு ஆதா­ர­மாக அமைந்­துள்ள தர­வு­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தா­லும், இந்த எச்­ச­ரிக்­கையை மருத்­து­வர்­கள் விடுத்­துள்­ள­னர். இத்­த­கைய திறன்­களை இழப்­பது கிரு­மித்­தொற்­றின் அடை­யா­ளம் எனும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த விரும்­பு­கி­றோம் என்று 'பிரிட்­டி‌ஷ் ரைன­லா­ஜி­கல் சொசைட்­டி'­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் கிளேர் ஹாப்­கின்ஸ் கூறி­யுள்­ளார்.

இங்­கி­லாந்­தின் காது, மூக்கு, தொண்டை மருத்­து­வர் குழு­வின் தலை­வ­ரான திரு நிர்­மல் குமா­ரும் திரு­வாட்டி கிளே­ரும் சேர்ந்து, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு பாது­காப்பு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ள­னர்.