பாரிஸ்: பிரான்சில் கொரோனா கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் மேலும் 112 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் மாண்டோர் எண்ணிக்கை 674ஆக உயர்ந்தது. கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களில் மருத்துவர் ஒருவரும் அடங்குவார்.
இந்நிலையில், கிருமித்தொற்றுக்கு எதிராக அயராது போராடிவரும் முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் புகழாரம் சூட்டினார்.
பிரான்சில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 11 விழுக்காடு அதிகரித்து 16,000ஐ தாண்டிவிட்டதாக அவர் கூறினார்.
பிரான்ஸ் முடக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலமாகிவிட்டது. மருத்துவரைப் பார்க்கவும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய கட்டுப்பாடுகள் பலன் தரும்வரை பொறுமை காக்கும்படி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

